ஏழு வயதுகள் மட்டுமே நிறைந்த 3ம் தரம் படிக்கும் என் மகனின் முதல் கவிதை. அழகு என்ற தலைப்பில். (இந்தியா திருச்சியில் இருந்து மகளீர் தினத்தில எழுதியது.)
அழகு.
பறக்கும் குருவிகள் அழகு
பச்சைப்பசேல் மரங்கள் அழகு- அதில்
மலரும் மலர்கள் அழகு
உயர்ந்த மலைகள் அழகு -அதில்
வளரும் தேயிலை அழகு
நீண்ட கடல் அழகு - அதில்
விளையும் முத்து அழகு
பூக்களின் இதழ்கள் அழகு - அதில்
தேனுறிஞ்சும் தேனீ அழகு
பச்சை புல்வெளி அழகு - அதில்
மேயும் பசு அழகு
மு.ஷதுர்ஜன்.(குட்டி வல்வையூரான் )
| Tweet | |||||

