சனி, 11 மே, 2013

ஹைக்கூக்கள் 12

 
மாணவர் போராட்டங்கள் இந்தியாவை உலுக்கிய நேரத்தில் எழுதப்பட்டவை இந்த ஹைக்கூக்கள்.




பசியால் நலிந்தாலும்
நலியாமல் வளர்வது
பட்டினிப் போராட்டம்.

இழுத்து மூடப்பட்டாலும்
முழுமூச்சாய் தொடர்கிறது
முன்மாதிரிகளின் போராட்டம்.



மயங்கி கிடந்தவர்களையும்
விழிக்க வைத்திருக்கிறது
மயங்கிய இவர்கள் போராட்டம்



விசிறிகளுக்கும்
வியர்த்துக் கொட்டுகிறது
விடுக்கப்பட்ட(??!!) அறிக்கை.

 

அரச நிழலில் அமர்ந்திருப்பது
புத்தனல்ல
புதுப் பேய்கள்.
வல்வையூரான்.