செவ்வாய், 3 செப்டம்பர், 2013

வலைப்பதிவர்கள் திருவிழா 2013.



எழுத்தாளர்கள் என்று
ஒரு காலம் இருந்தவர்கள் சிலரே
அந்த முறையகற்றி
வலை வழியாக
வந்த கருத்தெல்லாம் பதிந்து
நிலையாக அதனை
நிமிடதே பகிர்ந்து
நிலையுலகம் சுற்றியோர்
வலைப்பதிவர்கள்.


ஓரோரிடத்தில் நின்றோரை
ஓரிடத்தழைத்து
ஓரண்டுக்கு முன்னே
திருவிழாக் கண்டனர்
அது முதலாம் வலைபதிவர் திருவிழா



இன்று
சிங்காரச் சென்னை தனிலே
சிந்தை மகிழ்ந்தோர் எல்லாம்
சித்தம் குளிர குழுமினர்
ஆடினார் பாடினர்
ஆரவாரம் செய்தே
ஆலிங்கனம் செய்தனர்
இது இரண்டாம் வலைபதிவர் திருவிழா
 
அந்த சந்தோசம்
நேரில் எனக்கில்லை
இருக்கட்டும்
இன்னொரு திருநாளில்
யான் காண்பேன் இன்முகங்களை


இன்றைய தினத்திலும்
இருக்குதாம் ஒரு வழி
தொ(ல்)லை பேசி வழியாக
தொலைவிலிருந்தே
எல்லையில்லா ஆனந்தத்துடன்
உங்கள் எல்லையில் வந்து
உரைக்கின்றேன் வாழ்த்துக்கள் கோடி.

வளமான உங்கள் இல்லை எங்கள் விழா
வான் புகழ் கொண்டு சிறக்கட்டும்

ஒலிக்கட்டும் பதிவர்கள் குரல்
ஓங்கட்டும் பதிவர்கள் புகழ்.


(குறிப்பு: இந்த கவிதை எழுதப்பட்டது கனடா நேரம் இரவு 2.30(01.09.2013). ஆனால் காலை 5.00 மணிவரை ஆர்வத்தோடு காலையில் வேலை இருந்தும் முழித்திருந்து  மூன்று முறை தொடர்புகள் எடுத்தும் அங்கிருந்த சிலருடன் பேச முடிந்ததே அல்லாமல் விழாவில் படிக்க முடியவில்லை என்பது சோகமே...)
வல்வையூரான்.