வெள்ளி, 23 நவம்பர், 2012

கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள்



தாயின் வயிறு விட்டு 
தரணிக்கு வந்த 
தமிழ்த் தாயின் குழந்தைகள் நீங்கள்



தலைவன் அணி சேர்ந்து
தன்னையே தந்து
தமிழினம் காத்த காவல்தெய்வங்கள் நீங்கள்

விண்ணிலும் வென்று மீண்டு
விளையாட்டாய் சமராடி
வியக்க வைத்த வித்தகர்கள் நீங்கள்

கடலிலும் காவியம் படைத்து
கலங்களையும் வென்று
கடலலையென ஆர்ப்பரித்த கற்பூரங்கள் நீங்கள்

தரைவழி வந்த பகைக்கு
தலையிடி கொடுத்து
தம்மையே ஆகுதியாக்கிய தற்கொடையாளிகள் நீங்கள்

கார்த்திகை மாதங்களில் வந்து
கண்விழித்துக் காட்டி 
கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள் நீங்கள்.

பாடல்களின்  கருவாகி நின்று
பகையதை ஒடுக்கிய
பண்பாளர்கள் மண்ணில் விதையானமாவீரர்கள் நீங்கள். 
வல்வையூரான்