செவ்வாய், 7 மே, 2013

ஹைக்கூக்கள் 11

கண் விழித்ததும் கைபேசி
முழு ஆக்கிரமிப்பாய் நீ
முகப்புபக்கம்




நாளைய பொழுதுகளில்
காணாமல் போகின்றன
நேற்றுக்கள்



சிலுவையில் இன்று
அறையப்படுகின்றன
சிலுவைகளும்.



குளிர் நிழலில் இருந்தாலும்
கொதித்தபடி இருந்தது
மனசு.



பிறந்தநாளில் சந்தோசமாக இருக்கையில்
பின்னால் நின்று சிரித்தது காலம்
நான் போகின்றேன் என்று.



சிரித்தபோது வலித்தது
உதடுகள் மட்டுமல்ல
உள்ளிருந்த வேதனையும் தான்.



உனக்கான இருப்பை 'நான்'
தேடிக்கொண்டிருக்கின்றேன்
என்னைக் காணாமலே.



உறவுகள் உருமாறியது
உருவானது
பணம்.



நிரந்தர வாடிக்கையாளனாக நான்
நித்திய வியாபாரியாகவே
இறைவன்.
வல்வையூரான்.