பார்த்து சிரித்ததால்
முறிந்தது
அடுத்த வேலியின் பூவரசந்தடி
மங்கலம் பாடிக்கொண்டிருந்தாள் மனைவி மங்களம்
தலையாட்டிக்கொண்டிருந்தது
வேலியில் இருந்த ஓணான்
இராணுவத்தால் வெட்டப்பட்டிருந்தது வேலி
அழகாய் தெரிந்தது
பக்கத்து வீட்டு கிணற்றடி
இற்றுப் போனது கூரை
சிரித்தன
விண்மீன்கள்
நீ தூங்கியதால்
நான் தூங்கவில்லை
குறட்டை.
விரல்களின் நளினத்தால் விளைந்தது
நல்ல இசை
நடனமாடியது குழந்தை.
நிலவில் கூட மேடுபள்ளமுண்டு
இல்லை உன்முகத்தில்
மேக்கப்.
வல்வையூரான்.
| Tweet | |||||







