

நான் விழுந்ததும், வலித்தது
எனக்கல்ல
தாய்க்கு.

இன்றும் எங்கும்
விற்பனைக்கில்லை
தாயன்பு.

உள்ளே போனதால்
உளறப்பட்டன உண்மைகளும்
குடி

அன்றிருந்தது
இன்றில்லை
நீயும் உன் அன்பும்.

பெண்மையில் திருடப்பட்டது
நாணம்
புதுமைப் பெண்?

அரிதாகின்றது
தமிழ்நாட்டில்
தமிழ் !!!.

அழகாய் தெரிவது
மலரா ?
மங்'கை'யா ??

என் இதயம் துடிக்காமலே இருந்துவிடட்டும்
பத்திரமாக
அவள் தூங்குகிறாள்.

சுயிங்கமாகியது வாழ்க்கை
தினமும்
சப்பப்படுகிறது, இழுக்கப்படுகிறது.
வல்வையூரான்.
| Tweet | |||||