மழை பெய்தது
வயல் நிறைந்தது
உயர்த்தி கட்டிய வரப்பில்
நிறைந்து வந்தது வெள்ளம்
நிறைந்ததால் நிமிர்ந்தது
நிறை குலை தள்ளிய
விளைந்தது விண்ணுயர்ந்து
விளைவித்தவன் விவசாயி
உயர் விதை தேடி
உண்மை உழைப்பை
குருதியை உருக்கி
வியர்வையாய் கொட்டி
வான் பார்த்த பூமியில்
தான் பார்த்து ஆய்ந்து
நாற்று நடவு நட்டு
அங்கெ இங்கே
கடன வாங்கி
அதிகமும் இல்லாமல்
குறைச்சலும் இல்லாமல்
அளவாய் வரப்பு வெட்டி
அன்பான குழந்தைக்கு
பால் புகட்டுவது போல்
நன்றாய் நீர் விட்டு
இந்த உரம் என்று
இன்னும் கடன் வாங்கி
உழைப்பை போட்டு குழைத்து
உயர்த்திய நெற்கதிர் இது
விளைந்த நெற்கதிரை
விரைந்து அறுத்து
போரடுக்கி சூடடித்து
சம்பளம் குடுத்து
சாக்கு தைத்து எடுத்து
விற்பனைக்கு போனால்
விலை அங்கே கிடைக்காது
விற்றுவிடவே வேண்டும்
விவசாயிக்கு கடன்
தொண்டை அடைக்க நிக்குது
விற்றபின் வீடு திரும்பமுன்
வேண்டியது எல்லாம்
வாங்க முடியாமல்
வேண்டிய கடனை மட்டும்
வினயமாய் அடைத்து
வீடு சேர்கையில் வீட்டில்
நித்திய பிலாக்கணம் தான்
வரப்புயர்ந்தும் வாழ்வுயராமல்
வேதனையோடு விவசாயி.
வல்வையூரான்.
| Tweet | |||||








