செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஹைக்கூக்கள் 7








மலர்களும் வெட்கி தலைகுனிந்தன
அவை கண்டது
உந்தன் மலர்முகம்.





தனிமையில் முழுநிலவும் தகிக்கிறது
திருடிப்போனாய் 
தண்மையெல்லாம்.




நேற்றுப்போலவே இன்றும் இனிக்கிறது
உன் நினைவுகள்
காதல்.




அவள் திறந்து பார்த்தது
கடிதமல்ல 
என் இதயம்.




தூங்கும் போதும் 
விழித்தே இருந்தது
இடம்மாறிய மனசு.



முட்கள் குத்திய போதும்
வலிக்கவில்லை - அது
காதல்.

வல்வையூரான்.