பிடித்தவர்கள் அருகிலில்லை
பிடித்தது கை
கைத்தடியை.
எரித்துவிட்டாய்
எரிவது
நானல்ல நீ.
என்னை நீ குடிக்கையில்
உன்னில் நான் குடிக்கும்
ரத்தமும் சிவப்பு.
ஏற்றப்பட்டது விளக்கு
எரிவது
நெருப்பே!
அழைப்பு வந்தது
அடிபட்டது
அலைபேசி மட்டும் சேதமாகவில்லை.
நான் படித்தவற்றுள்
பெறுமதியானது
நீ.
வல்வையூரான்.
| Tweet | |||||






