செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஹைக்கூக்கள் 21.



துளையிடப்பட்டது புல்லாங்குழல்
வாசித்துக்கொண்டிருந்தவன்
வலியை மறந்தான்.





 வயதானாலும்
வாலிபத்தோடு தொடர்கின்றன
வலிமையான நட்புக்கள்.




புலரும் பொழுதுகள்
வெறுமையாக
அருகில் நீ இல்லை



 

இறுக்கி அணைத்து முத்தமிட்டாய்
வலித்தது எனக்கு
அந்த பூனையாக நான் இல்லையே




சவாரியில் பாய்தன மாடுகள்
இறந்தது
ஜீவகாருண்யம்
 
 
 
காடழித்து பயிரிட்டவர்கள்
காத்திருக்கின்றனர்
மழைக்காக.
 
 
 
  கூட்டத்தில் அலறிக்கொண்டிருந்தது ஒலிபெருக்கி,
பேச்சாளர் பேசிக்கொண்டிருந்தார்
ஒலிமாசு பற்றி




தினமும்
தூங்கிக்கொண்டிருக்கிறேன்
நில(னை)வோடு


வல்வையூரான்.