துளையிடப்பட்டது புல்லாங்குழல்
வாசித்துக்கொண்டிருந்தவன்
வலியை மறந்தான்.
வயதானாலும்
வாலிபத்தோடு தொடர்கின்றன
வலிமையான நட்புக்கள்.
புலரும் பொழுதுகள்
வெறுமையாக
அருகில் நீ இல்லை
இறுக்கி அணைத்து முத்தமிட்டாய்
வலித்தது எனக்கு
அந்த பூனையாக நான் இல்லையே
சவாரியில் பாய்தன மாடுகள்
இறந்தது
ஜீவகாருண்யம்
காடழித்து பயிரிட்டவர்கள்
காத்திருக்கின்றனர்
மழைக்காக.
காத்திருக்கின்றனர்
மழைக்காக.
| Tweet | |||||








