ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

திருமணவாழ்த்து.



கேசவன் தாரிகா 
இருவரும்
இரு மனமும் ஒரு மனமாய்
ஈருடல் ஓருயிராய்

இன்பத்திலும் துன்பத்திலும் 
இணைந்து
இல்லறத்தை நல்லறமாய்
நடத்தி
தங்கம் போல் தமிழை 
வளர்த்து காத்து 
வாழையடி வாழை போல்
வையம் உள்ளளவும் 
வல்வை முத்துமாரி அருளோடு
வளமான பதினாறு செல்வங்கள் பெற்று 
வானோங்க வாழ
வாழ்த்துகின்றோம்.

அன்புடன் 
வல்வையூரான்.


முத்தம்.

 
பேனையை விட
எனக்கு
பென்சிலாக
இருக்க ஆசை

ஏனெனில்
நீ சீவி
கூர் பார்க்கையில்
உன் கன்னங்களில்
அடிக்கடி...
முத்தமிடலாம்
.

வல்வையூரான்.