
தேடிக்கொண்டிருக்கிறேன்
காரணங்களை
என்னை வெறுப்பதற்கு.

விம்மும் போது
விளங்கியது
விபத்து.

அவன் காதல்
ஆரம்பித்ததும் முடிந்ததும்
'நன்றி'யில்

குளிர்ந்தபோது
தெரிந்தது
உள்ளிருந்து வெப்பம்.

விலையேற்றம்
குறைந்தது
விபச்சாரம்.

மௌனங்கள் போசிக்கொண்டன
அழுதது
குழந்தை.

அடிக்கப்பட்டது
உடைகின்றன
கற்களும் குழந்தைகளும்!!

சப்பாத்துக்களைத் துடைத்தான்
தூசு தட்டுப்படட்டும்
மனங்களில் இருந்து.

பெரும் பாலபிஷேகம்
இறைவனுக்கு,
குழந்தைக்கு?
வல்வையூரான்.
| Tweet | |||||

