சனி, 31 ஆகஸ்ட், 2013

ஹைக்கூக்கள் 20




அகரத்திலும்
முதலாய் நின்றது
அம்மா.


குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்துகொண்டிருந்தான் அவசரமாக
முடிந்துகொண்டிருந்தது
விவாகரத்து அனுமதித்த வாரத்துக்கான குழந்தை பார்க்கும் நேரம்.


பரவுகின்றது ஒளிவெள்ளம்
அடிபட்டுப் போகின்றன
பல இருள்கள்.


தனித்திருந்தன இரட்டைப்பனை
தொலைத்திருந்தன
தூரதேசத்தில் உறவுகளை.


குடிக்கையில்
குழம்பியது
அவள் மனதே.


பறந்துகொண்டிருந்தது கொடி
விரட்டிக்கொண்டிருந்தது
காற்று.

 

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து 
 

 சென்னையில் நடைபெறுகின்ற வலைப்பதிவர்கள் மாநாட்டில் நாங்கள் நேரில் கலந்து கொள்ளவில்லை, முடியவில்லை  எனினும் எங்கள் உள்ளங்களால் கலந்து அந்த நிகழ்ச்சி சிறப்புற அமைய வேண்டும் என இந்த பதிவின் வழி வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கின்றோம். சந்தர்ப்பம் அமையும் போது நாங்களும் கலந்து சிறப்பிப்போம்...  

நிகழ்ச்சி சகல முறையிலும் சகலரும் சந்தோசப்படும் வகையிலும் அமைய எங்கள் வாழ்த்துக்கள்.
 வல்வையூரான்.
 


திங்கள், 19 ஆகஸ்ட், 2013

ஹைக்கூகள் 19


கொன்று குவித்து கொளுத்தி எரித்தபின்னும்
கொழுந்துவிட்டு எரிந்தது
சாதியம்


 ஒப்பாரி ஓலத்திலும்
சிரித்தபடி இருந்தன
பிணத்தில் இருந்த மாலைகள்.

  
குளமெங்கும் நிறைத்து பூத்திருந்தாலும்
யாரும் பறிக்கவில்லை
அது ஆகாயத்'தாமரை'.


 திருடிக்கொண்டதால்
அகப்பட்டு ஆயுள்கைதியானான்
இதயத்திருடன்.


கொடும் விஷம் கொண்டவைதான்
சர்ப்பங்கள் இல்லை
சனத்துள் இருக்கும் சாதிகள்


கோட்டைகளிலும் ஏற்றப்பட்டன
மண்ணெண்ணெய் விளக்குகள்
எங்குமில்லை மின்சாரம்.


வாலிக்கு வலி வரிகள்

வெண் தாடி ஒன்று
கண் மூடிக் கொண்டது
வேதனை மிகுத்ததே

குங்குமப் போட்டு ஒன்று
சங்கமமாகுது எங்களின் மனங்களில் இன்று

(18.07.2013 எழுதியது.)
வல்வையூரான்.