செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

ஹைக்கூகள் 8







மலரே மலர்களுள் தேடினேன் கொடுப்பதற்கு 
கிடைக்கவில்லை 
உன்போன்ற அழகான மலர்.


கடையடியில் புகைந்தது அணைந்தது 
தெரு முனையில் 
நீ.


மரணம் கூட மகிழ்வாய் தெரிந்தது 
என் மனதில் 
மட்டுமே நீ ...


வந்த களைப்பு பறந்தது
கண்டேன்
காத்திருந்த உன்னை.


கடிகாரம் நிற்பதேயில்லை
நின்றிருந்தது
அவள் பக்கம் இருக்கையில்

வல்வையூரான் 

திங்கள், 25 பிப்ரவரி, 2013

தமிழ் காத்து வாழ்வோம்




தமிழ் அழகு மொழி - அறிவு
சிறந்தோர் உதித்த மொழி
தமிழுக்கு அழகு ழகரம் - அந்த 
தமிழ் இன்று இழந்தது பல 


நாடு இழந்தோம்
நகரிழந்தோம்
தன்னிகரிலா உறவுகளை இழந்தோம்
தங்கி வந்த நாட்டில்
தமிழில் எங்கள் பேரிழந்தோம்
இத்தனையிலும் பெருமையும் கொண்டோம்
இது எங்கள் சிறுமைதானே

தமிழன் நாம் பலர்
பேசுவது தங்கிலிஸ்
பேசுவது தங்கிலிஸனாலும்
அதிலும் பெருமை கொள்ளும்
சிற்றரிவினர் எம்மில் பலர்

லகரமும் ழகரமும் றகரமும்  ரகரமும்
எம்மில் பலருக்கு
சரியாக வருதில்லையாம்

தமிழை காதலி
தமிழுக்காக வாழ்ந்து பார்
அழகு தமிழ் உன்னோடு கொஞ்சும்

தமிழன் என்று சொல்வது பெருமை
தலை நிமிர்ந்து நிற்பது பெருமை
தமிழ் காத்து வாழ்வோம்
தலை வகுத்த வழி நிற்போம்.

வல்வையூரான் 

புதன், 13 பிப்ரவரி, 2013

இதயங்களில் ஏற்றிய பெருநெருப்பு


தடுமாற்றங்களும்
குழப்பங்களும்
நிறைந்த மன நிலை
நாம் என்ன செய்ய


2009
உலகமே சேர்ந்து
குழப்பியது எம்மை
குவிந்தது தாயகத்தில்
பிணங்களின் குவியல்

கந்தக புகை நிறைந்தது எங்கும்
நச்சு புகையும் சேர்ந்தே இருந்தது
இலங்கையில் ஓரினம்
இன்னோரினத்தின் முகவரி பறித்தது
பார்த்தது சர்வதேசம்
சதியில் ஐநாவும் பங்கெடுத்தது

உரிமைக் குடி ஒன்றின்
உரிமை மறுப்பை
உலகம் பார்த்தது
உரத்து அறிக்கை விட்டன
சில நாடுகள்
சிறிலங்கா செய்ததை
சரி என்று!!!

துன்னாலைப் பிறந்தவன்
லண்டன் நகர் வசித்தவன்
மூவொன்பதாண்டு வயதுளான்
முருகதாசெனும் பெயருளான்
மூண்ட சினம் கொண்டான்
உலகுக்கு உண்மை நிலை
புகன்றிட வந்தான்.

ஏழு பக்கத்தில்
எழுதி முடித்தான்
மரண சாசனம்
உண்மைக்காய்
உயிர்தரும் தமிழன்
முருகதாசன் என்று
ஒப்பமுமிட்டான்

சுதந்திரக் கதவு
ஒருநாள் திறக்குமென்றான்
துறந்தான் தன்னுயிர்
ஈந்தான் தன்னுடல்
சுதந்திர தீயில்

ஜெனிவாவில் ஐநா சபை
அதிர்ந்தாலும்
அலட்டிக்கொள்ளவில்லை
இன்றுவரை

இன்னவன் இழப்புக்கு
சர்வதேசமே
நீ ஒருநாள்
பதில் சொல்லியே
ஆக வேண்டும்

எரிந்தவன்
வாழ்கின்றான்
எம் இதயங்களில்
ஏற்றிய பெருநெருப்பாய்

வல்வையூரான்